Thursday, November 13, 2008

படிப்பு திருத்தம் தர வேண்டும்

அய்யா நீண்ட நாட்களாய் மகிழ்ச்சி புலம்பல்கள் புலம்பிய நான் இன்று வெறுப்புடன் புலம்பபோகிறேன். நேற்று சென்னை சட்ட கல்லூரியில் நிகழ்ந்த நிகழ்ச்சி மக்களிடத்தில் மாணவர்கள் மீதான வெறுப்பை மீண்டும் வளர செய்துள்ளது...

சட்டம் பயிலும் மாணவர்கள் தங்களுக்கு இடையில் மோதிக்கொண்டு சக மாணவர்களை தாக்கியதும் அதை காவல் துறையினர் வேடிக்கை பார்த்தும் நாடறிந்த நிகழ்வுகள் ஆகும். வருங்கால சமுதாயத்தின் முக்கிய தூண்களான சட்டம் பயிலும் மாணவர்கள் என் அப்படி நடந்து கொண்டார்கள் என்பதை பற்றி நான் புலம்ப போவது இல்லை. இனியும் அவர்கள் வன்முறையை கையில் எடுத்துக்கொள்ள கூடாது என்பதற்காகவே நான் புலம்புகின்றேன்.

நாம் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், எங்கே செய்கிறோம், இதை எல்லாம் கூட என்ன வேண்டாம். சிறிது மனிதாபிமானத்தோடு சிந்தித்து செயல்பட்டிருந்தால் இந்த நிலை வந்து இருக்காது. அதுவும் நேற்று இந்த நிகழ்வை நிகழ்த்தியது சட்டம் பயிலும் மாணவர்கள் என்பதை என்னும்போது நான் ஒரு மனிதன் என சொல்லிக்கொள்ளவே வெட்கப்படுகிறேன். சமூகத்தில் யாரேனும் குற்றம் புரிந்தால் மக்கள் முதலில் நாடுவது காவல் துறையையும் அடுத்து நாடுவது சட்டம் பயின்ற வல்லுனர்களையும் தான். இவ்விரு பிரிவினரில், சட்டம் பயிலும் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வதை வேடிக்கை பார்த்த காவல் துறையினரின் செயல் மிகவும் கண்டனத்திற்கு உரியது. இவர்களின் மகனோ அல்லது உறவினரோ இவ்வாறு தாக்கப்படுவதை இவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பார்களா? காவல் துறையினர் தங்களின் நண்பன் என்பதை விளம்பரம் மட்டும் செய்தால் போதாது. அவர்கள் மக்களை நண்பர்களாக நினைத்து அவரின் இடர் படும் வேலையில் முன்வர வேண்டும்.

நாம் நம்முடன் ஒற்றுமையாய் இருந்தால் தான், அடுத்தவர்கள் சண்டை போடும்போது அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும். நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லாத நேரத்தில், நாம் இலங்கையில் நடக்கும் கொடுமைகளை பற்றி பேசுவது நன்றாக இருக்காது.

மக்களே, நாம் இன்னமும் மக்களாக தொடர சிந்தித்து செயல் படுங்கள். மாக்களாக மாறாதீர்கள்..!!!

- கோபத்துடன் கிறுக்கன்...

Wednesday, November 5, 2008

அமெரிக்க தேர்தல் முடிவுகள்...

இதோ வருகிறது...

வருகிறது...

வந்து கொண்டே இருக்கிறது...

என அகில உலகையும் எதிர்பார்க்க வைத்த அமெரிக்க தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்து விட்டன...

ஊடகங்கள் கணித்தபடியே , பராக் ஒபாமா வெற்றி வாகை சூடி உள்ளார். முதன் முறையாக ஒரு ஆப்ரிக்க-அமெரிக்கன் வெற்றி பெற்று உள்ள நிகழ்வு மனதுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், அவரின் தேர்தல் வாக்குறுதிகள் சற்றே யோசிக்க வைக்கின்றன. அவரின் முக்கிய கொள்கை, அமெரிக்க பணிகளை அமெரிக்கர்களை கொண்டு செய்ய வில்லை என்றால், அந்த நிறுவனங்களுக்கு வரி விதித்து வரும் நிதியில் அமெரிக்க மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவேன் என்பது தான்.

உண்மையில் இந்த கொள்கை மிகவும் சிறந்த ஒன்றாக இருந்த போதிலும் இந்த கொள்கையினால், பாதிப்பு அடையபோகும் நாடுகள் நம்மின் ஆசிய நாடுகளே ஆகும்.

அதை போன்றே, இனி அமெரிக்காவிற்கு வந்து நீண்ட காலம் வேலை செய்வதற்கு தேவை படும் எச் -ஒன் பி எனும் விசாவின் எண்ணிக்கை குறைக்கப்படும்... இதுவும் அவரின் வாக்குறுதிகளில் ஒன்று தான்... இதுவும் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் வெறுக்கும் ஒரு கொள்கை ஆகும்...

இது வரையில் தன் பெண்ணிற்கு ஒரு தகவல் தொழில்நுட்ப மாபிள்ளை தான் வேண்டும் என அடம் பிடித்து வரும் பெற்றோர்களின் மனதில் இந்த கொள்கை ஒரு இடியாய் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

என்ன நடக்கும்??? ஆசிய நாடுகளின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்ன ஆகும்? ஊடகங்களின் கணிப்பு படி, உலக நாடுகளின் எதிர்காலம் என அறியப்படும் ஆசிய நாடுகளின் மத்திய தர குடும்பங்களின் நிலை என்ன ஆகும்? நான் படித்து முடித்த வுடன், என் தந்தை வாங்கும் சம்பளம் போல் ஐந்து மடங்கு வாங்குவேன் எனும் இளைஞர்களின் கனவுகள் நினைவாகுமா? இவை அனைத்தும் நடந்தால் நன்றாக தான் இருக்கும்.

காலம் அறிய வைக்கும்... நானும் உங்களுடன் அதன் முடிவிற்காக காது இருக்கின்றேன்...

- உங்கள் அன்பு கிறுக்கன்!!!

பாரத ரத்னா விருது - பீம்சென் ஜோஷி

மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, பிரபல ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் திரு. பீம்சென் ஜோஷி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகின்றது.

சுமார் எழுபது ஆண்டுகள் தன் வாழ்நாளில் கடந்த இந்த இசை மனிதருக்கு இந்த விருது மிகவும் பொருத்தமாகவே இருக்கும் என கருதுகிறேன்.

மீண்டும் புலம்புகிறேன்...
- உங்கள் அன்பு கிறுக்கன்!!!

Tuesday, November 4, 2008

சதுரங்க நாதன் ஆனந்த்


அய்யா வணக்கமுங்க...
மீண்டும் ஒரு இனிய புலம்பல்...

கடந்த வாரம் ஜெர்மனியில் நடந்த உலக சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற "விஸ்வநாதன் ஆனந்த், இனி, "சதுரங்கநாதன் ஆனந்த்" என அழைக்கப்பட்டாலும் பொருத்தமாக இருக்கும்.

அவரின் குழந்தை பருவத்தில் கிரிக்கெட் ஆட்டத்திற்கு தான் மதிப்பு அதிகம். ஆனால், தன் கவனத்தை அதன் மேல் செலுத்தாமல் சதுரங்கத்தின் மேல் செலுத்தி, இன்று தன் ஆட்ட திறனால் உலக போட்டியில் வென்று உள்ள, அதுவும் மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்தது உள்ள (சதுரங்கநாதன் ஆனந்த்) விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் புகழ்க் மென்மேலும் உயர நான் பிரார்த்திக்கிறேன்...

மீண்டும் ஒரு புலம்பலில் சந்திக்கின்றேன் அய்யா... நன்றி வணக்கம்...

-உங்கள் அன்பு கிறுக்கன்