Monday, February 23, 2009

ரஹ்மான் என்றொரு அதிசயம்

இன்னார் வாழ்ந்த நாளில் நாமும் வாழ்ந்தோம் என கூறும் வழக்கம் நம்மில் உண்டு. அவ்வாறே ரஹ்மான் எனும் அதிசயம் வாழும் நாட்களில் நாமும் வாழ்கிறோம் என்பது நமக்கு பெருமை தரும் விஷயம். இசையை புது உயரத்திற்கு கொண்டு செல்லும் அதிசய மனிதர் ரஹ்மான் என்றால் அது மிகை இல்லை.
உயரம் தொடும் மனிதன் மறக்கும் முதல் செயல் பணிவை மறப்பது. எத்துனை உயரம் தொட்டாலும் பணிவு மறவாமல் அடக்கம் கொண்டு நடக்கும் ரஹ்மான் ஒரு அதிசயம் என்றால் அது மிகை இல்லை.
இன்றும் ஒன்றல்ல இரண்டு ஆஸ்கர் விருதுகள் வாங்கியும் பணிவுடன் கடவுள்ளுக்கு நன்றி சொன்ன இந்த அதிசயம் இன்னும் பல சாதனைகள் புரிந்து தமிழுக்கும் இந்திய திரு நாட்டிற்கும் நற்பெயர் வாங்கி தர சிவராத்திரி யான இன்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். மீண்டும் புலம்பும் வரை "ஜெய் ஹோ"!!!

Thursday, February 19, 2009

பதிய விட்ட நினைவுகள்

அனைவருக்கும் எந்தன் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். (மிக தாமதமாக)
இத்துணை நாட்களாய் பதிவு செய்ய மறந்த நினைவில் நீங்காத செய்திகளின் தொகுப்பு:

ஒபமாவின் பதவி ஏற்பு விழா மற்றும் அவரின் "H-B" விசா பற்றிய முக்கிய முடிவு.

இலங்கையின் உச்ச கட்ட போர் மேகம்.

இலங்கையின் பெயரில் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் நடக்கும் அரசியல் நாடகங்கள்.

கிரிக்கெட்டில் இந்தியாவின் தொடரும் வெற்றி விழா. (இங்கிலாந்து மற்றும் இலங்கை போட்டி களில் ).

இவை எல்லா வற்றிற்கும் மேலாக, மும்பை தாக்குதல் சம்பவம் மற்றும் அதை தொடர்ந்து பாகிஸ்தான் நடத்தும் நாடக காட்சிகள். உலக நாடுகளின் அச்சுரதலுக்கு பிறகு பணிந்த அதன் குள்ள நரி தனம்.

இவற்றை தவிர்த்து எந்தன் எண்ணங்கள் இனி தொடர்ந்து வெளி படும்.

நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் வந்துள்ளேன்

நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் வந்து உள்ளேன். பனி நிமித்தமாக இத்தனை நாள் என்னால் வலை பதிவு செய்ய இயல வில்லை.