Thursday, November 13, 2008

படிப்பு திருத்தம் தர வேண்டும்

அய்யா நீண்ட நாட்களாய் மகிழ்ச்சி புலம்பல்கள் புலம்பிய நான் இன்று வெறுப்புடன் புலம்பபோகிறேன். நேற்று சென்னை சட்ட கல்லூரியில் நிகழ்ந்த நிகழ்ச்சி மக்களிடத்தில் மாணவர்கள் மீதான வெறுப்பை மீண்டும் வளர செய்துள்ளது...

சட்டம் பயிலும் மாணவர்கள் தங்களுக்கு இடையில் மோதிக்கொண்டு சக மாணவர்களை தாக்கியதும் அதை காவல் துறையினர் வேடிக்கை பார்த்தும் நாடறிந்த நிகழ்வுகள் ஆகும். வருங்கால சமுதாயத்தின் முக்கிய தூண்களான சட்டம் பயிலும் மாணவர்கள் என் அப்படி நடந்து கொண்டார்கள் என்பதை பற்றி நான் புலம்ப போவது இல்லை. இனியும் அவர்கள் வன்முறையை கையில் எடுத்துக்கொள்ள கூடாது என்பதற்காகவே நான் புலம்புகின்றேன்.

நாம் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், எங்கே செய்கிறோம், இதை எல்லாம் கூட என்ன வேண்டாம். சிறிது மனிதாபிமானத்தோடு சிந்தித்து செயல்பட்டிருந்தால் இந்த நிலை வந்து இருக்காது. அதுவும் நேற்று இந்த நிகழ்வை நிகழ்த்தியது சட்டம் பயிலும் மாணவர்கள் என்பதை என்னும்போது நான் ஒரு மனிதன் என சொல்லிக்கொள்ளவே வெட்கப்படுகிறேன். சமூகத்தில் யாரேனும் குற்றம் புரிந்தால் மக்கள் முதலில் நாடுவது காவல் துறையையும் அடுத்து நாடுவது சட்டம் பயின்ற வல்லுனர்களையும் தான். இவ்விரு பிரிவினரில், சட்டம் பயிலும் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வதை வேடிக்கை பார்த்த காவல் துறையினரின் செயல் மிகவும் கண்டனத்திற்கு உரியது. இவர்களின் மகனோ அல்லது உறவினரோ இவ்வாறு தாக்கப்படுவதை இவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பார்களா? காவல் துறையினர் தங்களின் நண்பன் என்பதை விளம்பரம் மட்டும் செய்தால் போதாது. அவர்கள் மக்களை நண்பர்களாக நினைத்து அவரின் இடர் படும் வேலையில் முன்வர வேண்டும்.

நாம் நம்முடன் ஒற்றுமையாய் இருந்தால் தான், அடுத்தவர்கள் சண்டை போடும்போது அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும். நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லாத நேரத்தில், நாம் இலங்கையில் நடக்கும் கொடுமைகளை பற்றி பேசுவது நன்றாக இருக்காது.

மக்களே, நாம் இன்னமும் மக்களாக தொடர சிந்தித்து செயல் படுங்கள். மாக்களாக மாறாதீர்கள்..!!!

- கோபத்துடன் கிறுக்கன்...

Wednesday, November 5, 2008

அமெரிக்க தேர்தல் முடிவுகள்...

இதோ வருகிறது...

வருகிறது...

வந்து கொண்டே இருக்கிறது...

என அகில உலகையும் எதிர்பார்க்க வைத்த அமெரிக்க தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்து விட்டன...

ஊடகங்கள் கணித்தபடியே , பராக் ஒபாமா வெற்றி வாகை சூடி உள்ளார். முதன் முறையாக ஒரு ஆப்ரிக்க-அமெரிக்கன் வெற்றி பெற்று உள்ள நிகழ்வு மனதுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், அவரின் தேர்தல் வாக்குறுதிகள் சற்றே யோசிக்க வைக்கின்றன. அவரின் முக்கிய கொள்கை, அமெரிக்க பணிகளை அமெரிக்கர்களை கொண்டு செய்ய வில்லை என்றால், அந்த நிறுவனங்களுக்கு வரி விதித்து வரும் நிதியில் அமெரிக்க மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவேன் என்பது தான்.

உண்மையில் இந்த கொள்கை மிகவும் சிறந்த ஒன்றாக இருந்த போதிலும் இந்த கொள்கையினால், பாதிப்பு அடையபோகும் நாடுகள் நம்மின் ஆசிய நாடுகளே ஆகும்.

அதை போன்றே, இனி அமெரிக்காவிற்கு வந்து நீண்ட காலம் வேலை செய்வதற்கு தேவை படும் எச் -ஒன் பி எனும் விசாவின் எண்ணிக்கை குறைக்கப்படும்... இதுவும் அவரின் வாக்குறுதிகளில் ஒன்று தான்... இதுவும் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் வெறுக்கும் ஒரு கொள்கை ஆகும்...

இது வரையில் தன் பெண்ணிற்கு ஒரு தகவல் தொழில்நுட்ப மாபிள்ளை தான் வேண்டும் என அடம் பிடித்து வரும் பெற்றோர்களின் மனதில் இந்த கொள்கை ஒரு இடியாய் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

என்ன நடக்கும்??? ஆசிய நாடுகளின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்ன ஆகும்? ஊடகங்களின் கணிப்பு படி, உலக நாடுகளின் எதிர்காலம் என அறியப்படும் ஆசிய நாடுகளின் மத்திய தர குடும்பங்களின் நிலை என்ன ஆகும்? நான் படித்து முடித்த வுடன், என் தந்தை வாங்கும் சம்பளம் போல் ஐந்து மடங்கு வாங்குவேன் எனும் இளைஞர்களின் கனவுகள் நினைவாகுமா? இவை அனைத்தும் நடந்தால் நன்றாக தான் இருக்கும்.

காலம் அறிய வைக்கும்... நானும் உங்களுடன் அதன் முடிவிற்காக காது இருக்கின்றேன்...

- உங்கள் அன்பு கிறுக்கன்!!!

பாரத ரத்னா விருது - பீம்சென் ஜோஷி

மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, பிரபல ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் திரு. பீம்சென் ஜோஷி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகின்றது.

சுமார் எழுபது ஆண்டுகள் தன் வாழ்நாளில் கடந்த இந்த இசை மனிதருக்கு இந்த விருது மிகவும் பொருத்தமாகவே இருக்கும் என கருதுகிறேன்.

மீண்டும் புலம்புகிறேன்...
- உங்கள் அன்பு கிறுக்கன்!!!

Tuesday, November 4, 2008

சதுரங்க நாதன் ஆனந்த்


அய்யா வணக்கமுங்க...
மீண்டும் ஒரு இனிய புலம்பல்...

கடந்த வாரம் ஜெர்மனியில் நடந்த உலக சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற "விஸ்வநாதன் ஆனந்த், இனி, "சதுரங்கநாதன் ஆனந்த்" என அழைக்கப்பட்டாலும் பொருத்தமாக இருக்கும்.

அவரின் குழந்தை பருவத்தில் கிரிக்கெட் ஆட்டத்திற்கு தான் மதிப்பு அதிகம். ஆனால், தன் கவனத்தை அதன் மேல் செலுத்தாமல் சதுரங்கத்தின் மேல் செலுத்தி, இன்று தன் ஆட்ட திறனால் உலக போட்டியில் வென்று உள்ள, அதுவும் மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்தது உள்ள (சதுரங்கநாதன் ஆனந்த்) விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் புகழ்க் மென்மேலும் உயர நான் பிரார்த்திக்கிறேன்...

மீண்டும் ஒரு புலம்பலில் சந்திக்கின்றேன் அய்யா... நன்றி வணக்கம்...

-உங்கள் அன்பு கிறுக்கன்

Monday, October 20, 2008

சந்திராயன் கணக்கு ஆரம்பம்

எல்லாருக்கும் வணக்கம்முங்க... இந்த முறை உங்களை சந்தோசத்துடன் பார்க்கிறேன்... இந்தியாவின் முதல் சந்திர பயணத்திற்க்கான கணக்கு இன்று ஆரம்பம் ஆகி உள்ளது. வரும் புதன் கிழமை விண்ணில் பாய திட்டம் தீட்டி உள்ளனர் நம் விண்வெளி ஆய்வாளர்கள்.

"சந்திராயன்" என பெயர் இடப்பட்டுள்ள இந்த பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைய நாம் அனைவரும் அவரவரின் வாழ்த்துகளை தெரிவிப்போம்... பாட்டி கதைகளில் மட்டும் இன்றி இனி வரும் காலங்களில் குழந்தைகள் உணவு உன்ன அடம் பிடித்தால், நாம் அவர்களை நிலவுக்கு கூட்டி சென்றாவது சாப்பிட வைப்போம்.

நம் முன்னோர்களின் கனவு நிஜமாவதை எண்ணி மகிழ்ச்சி அடையும் எண்ணிலடங்கா உள்ளங்களில் எந்தன் உள்ளமும் ஒன்று...
வாழ்க சந்திராயன் வளர்க இந்தியா...

அடுத்த முறை புலம்பும் வரை - விடை பெறுகிறான் உங்கள் அன்பு கிறுக்கன்...

Friday, October 17, 2008

உலக நாயகனின் உலக சாதனை

நான் குறிப்பிடும் உலக நாயகன் திரைத்துறையில் இல்லை. நிஜ வாழ்வில் விளையாட்டில் சாதனை படைத்த "சச்சின் டெண்டுல்கர்".

இவர் இன்றைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மொஹலி ஐந்து நாள் போட்டியில் மேலும் ஒரு உலக சாதனை படைத்தது உள்ளார். அவர் பிரைன் லாராவின் சாதனையை கடந்து பன்னிரண்டாயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் எனும் பெருமை கண்டுள்ளார்.

அவரின் சாதனையை சொல்ல புலம்ப ஆரம்பித்தால் நான் புலம்பிக்கொண்டே தான் இருக்க வேண்டும். ஆகவே, நான் இந்த செய்தியுடன் என் புலம்பலை நிறுத்திக்கொள்கிறேன்.

மீண்டும் புலம்புவேன். காத்து இருங்கள்...
;-)
- உங்களின் அன்பு கிறுக்கன்...

என்னை கவர்ந்த பதிவுகள்

இன்று எந்தன் இணைய கடித முகவரியை ஆராய்ந்த சமயம், ஒரு நண்பர் தன்னுடைய பதிவு முகவரியினை தண்டு இருந்தார்.

நான் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, அந்த பதிவினை ஆராய்கையில், அவரின் பல பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டன.

உங்களின் பார்வைக்கும் அது:
http://muniappanpakkangal.blogspot.com/

நண்பரின் பெயர் திரு. மோகன் என்பது ஆகும். இவர் ஒரு மருத்துவர் என்பது கூடுதல் தகவல். ஒரு மருத்துவர் தன்னுடைய கடுமையான பணியின் நடுவே, தமிழுக்கு இது போன்ற தொண்டு செய்துகொண்டு வருவது மிகவும் வரவேற்க கூடியது. சரி தானே? மோகன் அண்ணா, தங்களின் சிறப்பான பனி தொடர எண்ணின் பிரார்த்தனை என்றும் இருக்கும்...

நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தோசமாக புலம்பி உள்ளேன்.....

சற்று ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். மீண்டும் புலம்புவேன்...

Tuesday, September 2, 2008

கூகிள் அறிமுகப்படுத்தும் இணைய உலவி : "கிறோம்"


இது வரை இணைய அஞ்சலில் மட்டும் இதர போட்டியாளர்களுடன் மோதி வந்த கூகிள் நிறுவனம் இன்று தனது இணைய உலாவி "கிறோம்" என்பதை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் மூலம், தனது பக்கம் நோக்கி உலகை மீண்டும் ஒரு முறை திரும்ப வைத்து உள்ளது. இந்த வெளியீடு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் உலாவியின் வணிகத்தை பாதிக்கும் என எதிர் பார்க்கபடுகிறது. சமீப காலமாக பல்வேறு திசைகளிலிருந்து போட்டிகளை எதிர்கொள்ளும் மைக்ரோசாப்ட் இந்த உலாவி போட்டியை எப்படி சமாளிக்கும் என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இல்லாத நிலையில் மைக்ரோசாப்ட் இந்த போட்டியை சமாளிகுமேயானால், தன்னுடைய வரலாற்றில் மீண்டும் ஒரு வெற்றியை எட்டும் என சந்தேகம் இன்றி கூறலாம்.

மீண்டும் புலம்புவேன்...

Friday, August 22, 2008

மீண்டும் ஒரு பதக்கம்


நம் அன்னை இந்தியா தன் ஒலிம்பிக் பதக்க எண்ணிக்கையில் மீண்டும் ஒன்றை சேர்த்து உள்ளது. இன்றைய குத்து சண்டை போட்டியின் அரைஇறுதியில் தோற்றாலும் வெண்கல பதக்கம் வென்று நம் இந்தியா அன்னையை பெருமை பட வைத்து உள்ளார் விஜேந்தர் குமார்.

இது வரை நடை பெற்று உள்ள போட்டிகளில் நம் இந்தியா ௧ தங்கம் மற்றும் ௨ வெண்கல பதக்கங்கள் வென்று உள்ளது. இது நம் நாட்டிற்கு பெருமை சேர்க்க கூடிய செய்தி ஆகும்.

பணம் ஒன்றையே குறிக்கோள் என உள்ள கிரிக்கெட்டை மறப்போம். மற்ற போட்டிகளின் மீதும் நம் தேச கவனத்தை செலுத்தி மேலும் பல சாதனைகள் படைத்திட உறுதி கொள்வோம்.

மீண்டும் புலம்புவேன்.
- அன்புள்ள கிறுக்கன்...!!!

Wednesday, August 20, 2008

தங்கம் தொடர்ந்து வெண்கலம்

ஐயா,

ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மீண்டும் கூடி உள்ளது. நம் நாட்டின் சுஷில் குமார் மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்று உள்ளார். முதல் போட்டியில் தோற்றாலும் பின்னர் வெண்கலம் வென்று சீனா மண்ணில் இந்தியா வின் புகழை நிலை நாட்டியுள்ளார். உங்கள் அனைவருடனும் சேர்ந்து சுஷில் குமாரை பாராட்டுவதில் அடியேனும் மகிழ்ச்சி கொள்கிறேன் அய்யா...

மீண்டும் புலம்புவேன் பொறுத்து இருங்கள்...

---அன்புள்ள கிறுக்கன்

Tuesday, August 12, 2008

அபினவ் தந்த நம்பிக்கை


ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்லுமா என ஏங்கியவர்கள் மனதில் தன் திறமையின் காரணமாக தங்கம் வென்ற தங்க மகன் "அபினவ்" இந்தியாவின் மானம் காத்த தலை மகன். இனியும் நாம் கிரிக்கெட்டின் செலுத்தும் கவனத்தை மற்ற போட்டிகளின் மேலும் செலுத்துவோம். வீண் விளம்பரங்கள் மூலம் தங்களை செல்வந்தர்களாக மாற்றிக்கொண்ட கிரிக்கெட் வீரர்களை மறப்போம். நாட்டின் மானம் காக்கும் எந்த வொரு விளையாட்டு வீரனையும் மதிப்போம்...

புலம்பல்கள் தொடரும்...
--அன்பான கிறுக்கன்

Thursday, August 7, 2008

உலக வெப்பமயமாதல்

வணக்கமுங்க...

88888 இயக்கம் பற்றி புலம்ப போறேன்...

நாளை ஆகஸ்ட் 8, 2008 இரவு 8 மணிக்கு 8 நிமிடங்கள் மின் உபயோக சாதனங்களை அணைப்போம்...

இது உலக வெப்பமயமாதல் தடுப்பு இயக்கத்தின் அன்பான வேண்டுகோள் ... நாம் இவ்வாறு செய்வதின் மூலம் நம்மின் வருங்கால சந்ததி இன்னும் சில காலம் உயிரோடு வாழும்...

ஊர்கூடி இழுத்தால் தேர் கூட நகரும்... முயன்ற வரை சிறிய தொலைவு பயணங்களுக்கு நடந்தோ அல்லது சைக்கிள் மூலமோ செல்வோம் என உறுதி ஏற்போம்... பெட்ரோல் வண்டிகளை தவிர்ப்போம்... குப்பைகளை சரியான இடத்தில் சேகரிப்பதன் மூலமும் மற்றும் மரம் நடுவதன் மூலமும் நாம் நம்மின் உலக ஆயுளை சிறிது நீட்டிக்க இயலும்...

நாம் ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை படிப்பது போன்று நம் குழந்தைகள் கற்பனையில் ஆறு, மரம் பற்றி படிக்கும் நிலையை உருவாக்க வேண்டாமே...

புலம்பல்கள் தொடரும்...
--- உங்கள் அன்பான கிறுக்கன்!!!

உதாரணப் பள்ளி

புலம்பல்:
ஒரு அரசு பள்ளி செய்து வரும் புரட்சியை பாருங்கள்:

http://thatstamil.oneindia.in/news/2008/08/06/tn-a-rare-achievement-of-govt-school.html#cmntTop

பாருக்குள்ளே நல்ல நாடு, எங்கள் நாடு, தரமான கல்வி பயில இது போன்ற பள்ளியை நாடு...

புலம்பல்கள் தொடரும்...

Friday, May 9, 2008

புலம்பல் நம்பர் 1

அய்யா,

இது சமுதாய புலம்பல் இடம்...