Monday, October 20, 2008

சந்திராயன் கணக்கு ஆரம்பம்

எல்லாருக்கும் வணக்கம்முங்க... இந்த முறை உங்களை சந்தோசத்துடன் பார்க்கிறேன்... இந்தியாவின் முதல் சந்திர பயணத்திற்க்கான கணக்கு இன்று ஆரம்பம் ஆகி உள்ளது. வரும் புதன் கிழமை விண்ணில் பாய திட்டம் தீட்டி உள்ளனர் நம் விண்வெளி ஆய்வாளர்கள்.

"சந்திராயன்" என பெயர் இடப்பட்டுள்ள இந்த பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைய நாம் அனைவரும் அவரவரின் வாழ்த்துகளை தெரிவிப்போம்... பாட்டி கதைகளில் மட்டும் இன்றி இனி வரும் காலங்களில் குழந்தைகள் உணவு உன்ன அடம் பிடித்தால், நாம் அவர்களை நிலவுக்கு கூட்டி சென்றாவது சாப்பிட வைப்போம்.

நம் முன்னோர்களின் கனவு நிஜமாவதை எண்ணி மகிழ்ச்சி அடையும் எண்ணிலடங்கா உள்ளங்களில் எந்தன் உள்ளமும் ஒன்று...
வாழ்க சந்திராயன் வளர்க இந்தியா...

அடுத்த முறை புலம்பும் வரை - விடை பெறுகிறான் உங்கள் அன்பு கிறுக்கன்...

No comments: